search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடன் உதவி"

    • 7 பெண்களுக்கு கறவை மாடு வாங்க வங்கி கடன் உதவிகள் வழங்கப்பட்டது.
    • அண்ணாமலைக்கு மகளிர் குழுவினர் அணிவகுத்து நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அடுத்த கருப்பூர் கவ்டெசி தொண்டு நிறுவனத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வினோபாஜியின் 41-ம் ஆண்டு நினைவு தினம் மற்றும் மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் உதவி வழங்கும் விழா தொண்டு நிறுவன தலைவர் மாவடியான் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு 9 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.95 லட்சத்து 40 ஆயிரம் வங்கி கடன் உதவி வழங்கினார்.

    மேலும், பாரத பிரதமரின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அகரப்பேட்டையை சேர்ந்த ஒருவருக்கு ரூ.10 லட்சம் கடன் உதவி, ஏழை பெண்களுக்கு வேஷ்டி- சேலை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து, 7 பெண்களுக்கு கறவை மாடு வாங்க வங்கி கடன் உதவிகளும் வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன செயலாளர் கருணாமூர்த்தி, பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில விவசாய பிரிவு செயலாளர் வெங்கடேசன், தமிழ்நாடு அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் ஜீவா சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினார்.

    முன்னதாக கவ்டெசி தொண்டு நிறுவனத்திற்குள் வந்த பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கு மகளிர் குழுவினர் அணிவகுத்து நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கையில் 25 சதவீதம் தாட்கோ மூலம் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை

    நாகர்கோவில் 

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வாயிலாக நிலம் வாங்குதல் திட்டமானது ஆதிதிராவிடர் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு என உருவாக்கப்பட்டு, அவர்க ளின் நிலஉடைமையை அதிகரிக்கும் பொருட்டு இத்திட்டம் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    பெண்கள் இல்லாத குடும்பங்களில் கணவர் அல்லது மகன்க ளுக்கு வழங்கப்ப டும். இத்திட்ட த்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டவராகவும், 18-65 வயதிற்குள்ளாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்த மகளிர் அல்லது மகன்கள் அல்லது கணவர் பெயரில் மட்டுமே வாங்கப்படும் நிலம் பதிவு செய்யப்பட வேண்டும்.

    இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் அற்றும் பதிவு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும். மேலும், நிலம் மேம்படுத்துதல் (இரு பாலருக்கும்) திட்டத்தின்கீழ் ஆழ்குழாய் கிணறு, திறந்த வெளி கிணறு, பம்பு செட் அமைத்தல், குழாய் அமைத்தல், சொட்டுநீர் பாசனம் மற்றும் சுழல்முறை நீர்பாசனம் அமைத்தல் போன்றவற்றிற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டவராகவும், 18-65 வயதிற்குள்ளாகவும் இருக்க வேண்டும். ஆதிதிராவடர் விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு பெற்றுத்தந்திட முன்னுரிமை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற வயது வரம்போ, குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்போ ஏதும் இல்லை. தொழில் முனைவோர் திட்டம் – சிறப்புத்திட்டமானது பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைப்ப தற்கானது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எண்ணெய் நிறுவனத்தால் அவ்வபோது நிர்ணயம் செய்யப்படும் வயது வரம்பு, கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். தொழில் முனைவோர் திட்டத்தில் இணையும் விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த 18-–65 வயத்திற்குள்ளவராகவும், தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் ஏதும் பெற்றிருக்கக் கூடாது. இத்திட்டத்தின்கீழ் உருவாக்கப்படும் சொத்து விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும்.

    இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கையில் 25 சதவீதம் தாட்கோ மூலம் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரர் தொழில் புரிவதற்காக கடன் மற்றும் மானியம் பெறப்பட்ட மாவட்டத்திலேயே தொழில்புரிய வேண்டும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டத்தில் குழு உறுப்பினர்கள் ஆதிதிராவிடர் மகளிர் 18-– 65 வயதுவரை உடையவராக இருக்கலாம். இதுவரை அரசு மானியம் பெறாத குழுவாகவும் இருக்க வேண்டும், சுழல்நிதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பல்வேறு திட்டங்கள் இத்துறையின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டங்களில் பயன்பெற விரும்ப முள்ள வர்கள் ஆதிதிராவிடர்கள் http://application.tahdco.com என்ற இணையதளத்திலும், பழங்குடியினர் எனில் http://fast.tahdco.com என்ற இணையதளத்திலும் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் தாட்கோ, மாவட்ட கலெக்டர் அலுவலகம், நாகர்கோவில் முகவரியிலும், தொலைபேசி எண் 04652-220532, அலைபேசி எண் 94450 29468 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் 2021-23-ம் ஆண்டில் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 52 பயனாளிகளுக்கு ரூ.66.6 கோடி மதிப்பில் அரசு மானியத்துடன் கூடிய ரூ.2.16 கோடி மதிப்பிலான கடனுதவியும், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 46 பயனாளிகளுக்கு ரூ.44.04 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய ரூ.1.87 கோடி மதிப்பிலான கடனுதவியும், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் (மருந்தகம்) கீழ் 1 பயனாளிக்கு ரூ.2.25 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் மதிப்பிலான கடனுதவியும், நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.1.80 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய ரூ.3.60 லட்சம் மதிப்பிலான கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விழாவுக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார்.
    • 31.45 கோடி மதிப்பீட்டில் கடன் உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

     குடிமங்கலம் : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை குடிமங்கலம் ஜெயராணி மஹாலில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். சண்முகசுந்தரம் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 2728 பயனாளிகளுக்கு ரூ.31.45 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு பொறுப்பேற்றதிலிருந்து திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின்மூலம் 35 முழு நேர நியாய விலைக்கடைகளும், 25 பகுதி நேர நியாய விலைக்கடைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பல்வேறு பணிகளை இந்த கூட்டுறவுத்துறை செயல்படுத்துகிறது.

    2023-2024 ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பயிர்க்கடன்கள் 28,845 விவசாயிகளுக்கு ரூ.313.06 கோடியும், நகைக் கடன்கள் 75,079 நபர்களுக்கு ரூ.668கோடியும், மத்திய காலக் கடன்கள் 543 நபர்களுக்கு ரூ.5.25 கோடிக்கும், 156 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.86 லட்சமும், டாப்செட்கோ கடன் 377 நபர்களுக்கு ரூ.2.72கோடியும், டாம்கோ கடன்களாக 120 நபர்களுக்கு ரூ.94 லட்சமும், 1044 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.53.88 கோடியும், வீட்டுக் கடன் 301 நபர்களுக்கு ரூ.15.13கோடியும், சிறுகடன்கள் 1212 நபர்களுக்கு ரூ.4.53 கோடியும் மற்றும் இதர கடன்கள்2372 நபர்களுக்கு ரூ.68.24 கோடி அளவிற்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவுவங்கிகள் மூலம் மொத்தம் 1,10,049 நபர்களுக்கு ரூ.1132.61 கோடி அளவிற்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார். விழாவினை முன்னிட்டு 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.

    மேலும் 2533 பயனாளிகளுக்கு ரூ.2550 லட்சம் மதிப்பீட்டில் பயிர் கடனுதவிகளும், 91 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.449 லட்சம் மதிப்பீட்டில் சுயஉதவிக்கு ழுக்கடன்களும், 19 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.75 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளும், 25 நபர்களுக்கு ரூ.6.55 லட்சம் மதிப்பீட்டில் சிறுவணிக கடன் உதவிகளும், 24 நபர்களுக்கு ரூ.32.87 லட்சம் மதிப்பீட்டில் மத்திய காலக்கடனுதவிகளும், 17 நபர்களுக்கு ரூ.18.99 லட்சம் மதிப்பீட்டில் டாம்கோ கடனுதவிகளும், 2 நபர்களுக்கு ரூ.18.63 லட்சம் மதிப்பீட்டில் தாட்கோ கடன் உதவிகளும், 4 நபர்களுக்கு ரூ.1.90 லட்சம் மதிப்பீட்டில் டாப்செட்கோ கடன் உதவிகளும், 7 நபர்களுக்கு ரூ.29.91 லட்சம் மதிப்பீட்டில் வீட்டு அடமானக்கடன் உதவிகளும், 1 நபருக்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுவசதி கடன் உதவிகளும், 1நபருக்கு ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சரக்கீட்டுக் கடன் உதவிகளும், 4 நபர்களுக்கு ரூ.15.30 லட்சம் மதிப்பீட்டில் பண்ணை சாராக்கடன் உதவிகளும் என மொத்தம் 2,728 நபர்களுக்கு 31.45 கோடி மதிப்பீட்டில் கடன் உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

    அதனைத்தொடரந்து, மாவட்ட சிறந்தகூட்டுறவு சங்கங்களுக்கு நினைவு பரிசும்,கலைஞர் 100 வினாடி வினா நிகழ்ச்சியில் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி யாழினிக்கு நினைவு பரிசினையும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானகழகத்தின் சார்பில், மின் விபத்து ஏற்பட்டு உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சத்திற்கான இழப்பீட்டுத்தொகைக்கான காசோலையினையும் மற்றும் 4 கூட்டுறவுசங்கங்களுக்கு டிராக்டர்களையும் அமைச்சர் வழங்கினார்.

    விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், கூட்டுறவு சங்கங்களின் துணை ப்பதிவாளர்கள் கந்தசாமி, தமிழ்ச்செல்வன், துரைராஜ், முத்துசாமி, தமிழரசு, துணைப்பதிவாளர் (பயிற்சி)காலிதாபானு, கூட்டுறவு சங்கத்தலைவர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    • திட்டத்தின்படி எந்தவித ஜாமீனும் இல்லாமல் வங்கிகள் ரூ.10 ஆயிரம் முதல் தவணையாக வழங்கும்.
    • சென்னையில் இதுவரை 500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் பயன் அடைந்துள்ளார்கள்.

    சென்னை:

    சாலையோரங்களில் தள்ளு வண்டிகளில் காய்கறிகள், பழங்கள் விற்பவர்கள், அயர்ன் கடை வைத்திருப்பவர்கள், இளநீர், கரும்பு ஜூஸ் போன்ற வியாபாரங்கள் செய்து வருபவர்கள் தண்டலுக்கு கடன் வாங்கி சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

    இதை தவிர்த்து அவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இந்த திட்டத்தின்படி எந்தவித ஜாமீனும் இல்லாமல் வங்கிகள் ரூ.10 ஆயிரம் முதல் தவணையாக வழங்கும். அதை முறையாக செலுத்தினால் 2-வது தவணையாக ரூ.20 ஆயிரமும், 3-வது தவணையாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.

    இந்த திட்ட பலன்கள் அவர்களை சென்றடைய பா.ஜனதாவினர் அவர்களுக்கு வங்கிகளில் ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள்.

    சென்னையில் இதுவரை 500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் பயன் அடைந்துள்ளார்கள்.

    கொளத்தூர், மாதவரம் தொகுதிகளில் 110 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு மாதவரத்தில் நடந்த நிகழ்ச்சியில் வங்கி அதிகாரிகள் கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் சென்னை மேற்கு மாவட்ட பா.ஜனதா வர்த்தக பிரிவு நிர்வாகிகள் மற்றும் மாநில தலைவர் ராஜாகண்ணன், சஞ்சீவி, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும் பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.
    • இத்தொழிலினை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) வழியாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக அனைத்து மாவட்டங்களில் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மேற்படி இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் உரிமையாளர் கட்டணம் ரூ.2லட்சம் முற்றிலுமாக விலக்கும், விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும் பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.

    மேலும் மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும். இத்தொழிலினை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    இத்தொழிலுக்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை திட்டத்தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் எனவும் பழங்குடியினருக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுக்கொள்ளலாம் . மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்:501 (ம) 503, 5வது தளம், மாவட்ட கலெக்டர் வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர் -641604 என்ற முகவரியையும், 94450 29552, 0421 -297112 என்ற செல்போன், தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும்,
    • ஆதிதிராவிடர்களுக்கு திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தொழில் முனைவோரின் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர், ஆவின் பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ வழியே மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.

    100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராகவும் அத்துடன் கூடுதலாக இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.

    50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உறைவிப்பான் ,குளிர்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிடும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.

    200 நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு சமூக பொருளாதார நிலையில் மேம்பாட்டு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் (விழுக்காடு) அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும் (www.tahdco.com). மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் .மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்:501 (ம) 503,5 வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர் - 641 604 என்ற முகவரியையும், 94450 29552,தொலைபேசிஎண்: 0421-2971112 ஆகிய செல்போன்-தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி திட்ட த்தின் கீழ் 509 நபர்களுக்கு ரூ.548.87 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
    • கூட்டுறவு சார்பதிவாளர் சித்ரா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், பள்ளபாளையம் தொடக்க வேளாண்மைகூட்டுறவு சங்கம் வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூட்டுறவு எண்ணெய் ஆலையை கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்து, 60பயனாளிகளுக்கு ரூ.48.13 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    பள்ளபாளையம் கூட்டுறவு சங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஒரு நீண்ட பாரம்பரியத்திற்கு உரியது. விவசாய பெருங்குடி மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக சிறப்பாக செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. மேலும் எண்ணெய் ஆலை மட்டுமில்லாமல் தொழிற்சாலை நடத்தக்கூடிய அளவில் வளர வேண்டும் என எனது வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    விவசாயத்தை மேற்கொள்ளும் அளவுக்கு இந்த சங்கம் வளர்ந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.அரசு நடத்தக்கூடிய சங்கத்தின் மூலமாக பொதுமக்களிடம் இருந்து வரக்கூடிய கடலை பருப்புகளை கொள்முதல் செய்து அரைத்து சுத்தமான எண்ணெய் எடுத்துவெளிபகுதி மக்களை கவரக்கூடிய வகையில் வளர்ந்து இருக்கிறது. ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு கடன் உதவிகள் வழங்கும் வகையிலும் இணைக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி திட்ட த்தின் கீழ் 509 நபர்களுக்கு ரூ.548.87 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசின் நகைக்கடன்தள்ளுபடி திட்டத்தின் கீழ் 394 நபர்களுக்கு ரூ.190.56 லட்சம் நகைக்கடன் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் 8 குழுக்களுக்கு 80 நபர்களுக்கு ரூ.4.68 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு கடன்தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றார்.

    தொடர்ந்து, 24 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளையும், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.50,000 மதிப்பீட்டில் கடனுதவியையும், 29 நபர்களுக்கு ரூ.34.13 லட்சம் மதிப்பீட்டில் கே.சி.சி பயிர் கடனுதவிகளையும், 6நபர்களுக்கு ரூ.5.50 லட்சம் மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடனுதவிகளையும் என மொத்தம் 60 பயனாளிகளுக்கு ரூ.48.13 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை அமைச்சர் வழங்கினார்.

    விழாவில் துணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) கந்தசாமி, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலக்குழுத்தலைவர் இல.பத்மநாபன், கூட்டுறவு சார்பதிவாளர் சித்ரா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்
    • கலெக்டர் தகவல்

    வேங்கிக்கால்:

    பெட்ரோல் பங்க் அமைக்க தாட்கோ மூலம் கடன் உதவி வழங்கப்படும் என பா.முருகேஷ் தெரிவித்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பெட்ரோல் பங்க் அமைக்க தாட்கோ மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.

    www.petrolpumpdealerchayan.in என்ற இணையதளத்தில் 18 வயது முதல் 60 வயதிற்கு உட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்.

    பெட்ரோலிய நிறுவனத்தால் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு முதல் முறையாக வாங்கும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை குறைந்த வட்டியில் தாட்கோ மூலம் கடன் வழங்கப்படும்.

    தேர்வு செய்யப்படும் நபர்கள் தாட்கோ தலைமை அலுவலக திட்ட மேலாளரை 73584 89990 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெற்று பயன்பெறலாம் என கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்தார்.

    • கூடுதல் தலைமை செயலாளர் பேச்சு
    • நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், மாசற்ற எரிசக்தியும், தொழில் முன்னேற்றமும் குறித்து ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற் நிறுவனங்கள் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கலெக்டர் வளர்மதி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், எரிசக்தி வளர்ச்சி முகமை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு சிறப்பு திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்து அதன் வாயிலாக பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்து, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தி வருகிறார்.

    தமிழக அரசின் சிறப்பு திட்டத்தில், படித்த இளைஞர்களுக்கு, முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்கிட 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கி வருகிறது.

    அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 35 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கி வருகிறது. மேலும் மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கிடவும், காற்றாலை மற்றும் சூரிய மின் ஆலை அமைக்கவும், விடுதி மற்றும் உணவகம், திருமண மண்டபம், வணிக வளாகம் கட்டுவதற்கும் கடனுதவி அளித்து வருகிறது.

    புதிய தொழில் தொடங்குபவர்களுக்கும், தொழில்களை விரிவுபடுத்து பவர்களுக்கும் பல்வேறு கடன் உதவிகளை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் செய்து வருகிறது. இதனை தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இக்கழகத்தின் முக்கிய நோக்கம் கடனுதவி வழங்குவது அல்ல.

    தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கும், தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகள் மற்றும் என்ஜினீயரிங் தொழிற்சாலைகள், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் களம்பூர் பகுதிகளில் அதிக அளவில் நெல் அரவை செய்யப்பட்டு வருவதால் அவர்களுடைய தொழில்கள் விரிவுபடுத்துவதற்கும் நவீன உத்திகளான சூரிய தகடுகளை பயன்படுத்தி மாசற்ற எரிசக்தி, பசுமை உற்பத்தியை பின்பற்றி தொழில் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

    கூட்டத்தில் சென்னை முதுநிலை மண்டல மேலாளர் பழனிவேல், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கிளை மேலாளர் ஜனார்தனன். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன் மற்றும் அரிசி ஆலை சங்கம், சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்கூடம் சங்கங்களின் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

    Heading

    Content Area


    • உதயநத்ததில் நெசவாளர்களுக்கு முத்ரா கடன் வழங்குதல் மற்றும் மரக்கன்று நடுதல்
    • தேவாங்கா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவுத் துறை சார்பில் மரக்கன்று நடுதல் மற்றும் நெசவாளர்களுக்கு முத்ரா கடன் வழங்கும் விழா நடைபெற்றது.


    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அடுத்த உதயநத்தம் தேவாங்கா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவுத் துறை சார்பில் மரக்கன்று நடுதல் மற்றும் நெசவாளர்களுக்கு முத்ரா கடன் வழங்கும் விழா நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு முத்ரா கடனை வழங்கி தொடக்கி வைத்தார். முன்னதாக அவர் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்தார். இந்நிகழ்வில் கைத்தறித்துறை உதவி இயக்குநர் கே.மோகன், கும்பகோணம் சரக அலுவலர் பூபதி, கைத்தறி ஆய்வாளர் செல்வகுமார், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் வெ.பாலசுப்ரமணியன் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்க நிர்வாகிகள், நெசவாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


    • வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 6 தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
    • ஊராட்சி ஒன்றிய தலைவர் வழங்கினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் தொழில்முனைவோருக்கான பயிற்சி தொடங்கியது.

    இதில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 6 தொழில் முனைவோருக்கு ரூ.38 லட்சம் மதிப்பில் 30 சதவீத மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது.

    மேலும் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ.70 ஆயிரம் வரை நுண்தொழில் நிறுவன நிதி கடன் திட்டம் மூலம் 10 பேருக்கு 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவா் ராம்குமாா், மாவட்ட திட்ட செயல் அதிகாரி ரமேஷ் கிருஷ்ணன், செயல் அலுவலா்கள் தினேஷ்குமாா், ப்ரீத்தா மற்றும் தொழிற்சாா் வல்லுநா்கள், கோத்தகிரி வட்ட மகளிா் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டாா்.

    • திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையில் வங்கிகளுடனான கூட்டம் நடைபெற்றது.
    • நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் குணசேகரன் மற்றும் சுகாதார அலுவலர்கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    திருவள்ளூர்:

    தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் திருவள்ளூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 2023 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது. மொத்தம் 1207 பேருக்கு முதல் தவணையில் ரூ.10 ஆயிரம் வீதமும், இரண்டாவது தவணையில் 297 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரம்,3-வது தவணையாக 13 பயனாளிகளுக்கு ரூ.50ஆயிரம் வீதம் கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 742 விண்ணப்பங்கள் வங்கிகளிடமிருந்து திரும்ப பெறப்பட்டது. அந்த விண்ணப்பங்களை மீண்டும் கடன்பெறும் வகையில் தயார் செய்ய திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையில் வங்கிகளுடனான கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சமுதாய அமைப்பாளர் சாந்தி-7010270560, சமுதாய வளபயிற்றுனர்கள் நாகேஷ்வரி-8608242774, சகிலா-7397133219 ஆகியோரின் எண்ணில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று மீண்டும் பதிவேற்றம் செய்ய கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டு உள்ளது.இதில் மகளிர் உதவி திட்ட அலுவலர், பெரியநாயகம். நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் குணசேகரன் மற்றும் சுகாதார அலுவலர்கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×